அடுத்தடுத்து சோகம் - ரெயில் முன்பு பாய்ந்து தலைமை காவலர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


அடுத்தடுத்து சோகம் - ரெயில் முன்பு பாய்ந்து தலைமை காவலர் தற்கொலை.!

நேற்று இரவு மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியைச் சேர்ந்த பெண் காவலரான ஜெயலட்சுமி தனது குழந்தைகளுடன்  ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்று காலை காவல்துறையைச் சேர்ந்த மேலும் ஒரு தலைமை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, கடலாடி வட்டம் கொங்கரங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கபாண்டியன். இவர் செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புபடை ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். 

இவர் நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து சொக்கலிங்கபாண்டியனின் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இவர் முன்னதாக மதுரை ரயில் நிலையத்தில் பணிபுரிந்த போது அங்கு பணிபுரிந்த ஜெயலட்சுமி என்ற பெண் காவலருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். 

இந்த நிலையில் நேற்று இரவு ஜெயலட்சுமி தனது குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து சோகம் தாங்காமல் இவரும் தற்கொலை செய்து கொண்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police officer sucide front of train in chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->