சேலத்தில் அதிர்ச்சி.! தெருக்கூத்து பார்த்து விட்டு திரும்பிய 78 வயது மூதாட்டி பலாத்காரம்... போலீசார் விசாரணை...! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் தெருக்கூத்து பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்த 78 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் இருப்பாளி பகுதியை சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி. இவரது மகன்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனியாக வசித்து வந்த மூதாட்டி நேற்று முன்தின இரவு கோவில் திடலில் நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதையடுத்து தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, மூதாட்டி வீட்டிற்கு தனியாக வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது மூதாட்டியை வழிமறித்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், மூதாட்டியின் வாயை பொத்தி அருகில் உள்ள புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்த வாலிபர் மூதாட்டியை தாக்கியதில் அங்கேயே மூதாட்டி மயக்கம் அடைந்தார். இதைத்தொடர்ந்து மயக்கம் தெளிந்து வீட்டிற்கு வந்த மூதாட்டி நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மூதாட்டியை சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து உறவினர்கள் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸ் அவர் மூதாட்டி பலாத்காரம் செய்த மர்ம வாலிபர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police investigation for 78 year woman raped in salem


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->