மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை..காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


நான்காம் ஆண்டு மருத்துவ மாணவி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையை அடுத்த வானம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் நந்தினி. இவர்  கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நான்கு ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார். நீண்ட நேரம் ஆகியும் அவரது விடுதியில் அறை கதவு திறக்காததால் அவருடைய தோழி அறை கதவை தட்டியுள்ளார்.

ஆனால், எந்தவித சுற்றுலா விடுதி காப்பாளர் தகவல் அளித்துள்ளார் உடனடியாக அங்கு வந்த விடுதி காப்பாளர் ஜன்னலை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறுவை சிகிச்சை செய்யும் கருத்தில் கொண்டு மணிக்கட்டு வெட்டி பின்னர் துப்பட்டாவை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதியில் மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigation about Medical college Student


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->