#கள்ளகுறிச்சி || மர்மமான முறையில் உயிரிழந்த பெண்..காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


தபால் துறை பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியில் வசித்து  வருபவர் அஞ்சு. இவர் தபால்துறையில் அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவதன்று அவரது வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கதினர் அவர் வீட்டின் உள்ளே சென்று பாரத்த போது அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்படாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police inveatigation about Woman Death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->