கோவை: “வேங்கைவயலை விட பெரும் அவலம்” 3 கோடி மக்களின் குடிநீரில் கலக்கும் மலக்கழிவு... அதிர்ச்சி வீடியோ!
kovai drinking water issue nimal rahavan shocking video
மத்திய , மாநில அமைச்சர்களால் பாராட்டுப்பெற்ற இயற்க்கை ஆர்வலரும், நீர்மேலாண்மை ஆர்வலருமான நிமல் ராகவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “வேங்கைவயலை விட பெரும் அவலம்” 3 கோடி மக்களின் குடிநீரில் கலக்கும் மலக்கழிவு!
புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டு ஒட்டுமொத்த தமிழகமே கொதித்தெழுந்தது. ஆனால், தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 கோடி மக்களின் தாகத்தைத் தீர்க்கும் “காவிரி கூட்டுக்குடிநீர் ஆதாரத்தில்” தினமும் லட்சக்கணக்கான லிட்டர் மனித மலக்கழிவுகள் கலக்கப்படும் அதிர்ச்சி உண்மை உங்களுக்குத் தெரியுமா?
நடப்பது என்ன?
கோவை மாநகராட்சியின் உக்கடம் அருகே உள்ள #புட்டுவிக்கி பகுதியில், மனித கழிவுகள் கலந்த பாதாள சாக்கடை நீர் எந்தவித சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக “நொய்யல் ஆற்றில்” திறந்துவிடப்படுகிறது.
இந்த நச்சு நீர், கரூர் அருகே நேரடியாக “காவிரி ஆற்றில்”கலக்கிறது.
காவிரி ஆற்றுப் படுக்கைகளில் உள்ள உறை கிணறுகள் (Infiltration Wells) மூலமாக உறிஞ்சப்பட்டு, கூட்டுக்குடிநீர் திட்டங்கள் வழியாக நம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் இந்த மலக்கழிவுகளும் மறைமுகமாகக் கலந்து வருகின்றன!
இது ஏதோ ஓராண்டு பிரச்சனை அல்ல; கடந்த 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடக்கும் அநீதி!
கர்நாடகா கழிவுநீரைக் கலப்பது வேற்று மாநில அநீதி என்றால், நம் சொந்த மாநிலத்தில் நம்மவர்களே செய்யும் இந்தத் துரோகத்தை என்னவென்று சொல்வது?
இதை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும்! கோவை மாநகராட்சியும், தமிழக அரசும் உடனடியாகத் தலையிட்டு, புட்டுவிக்கி பகுதியில் சுத்திகரிக்கப்படாத பாதாள சாக்கடை நீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்து நிறுத்தப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
English Summary
kovai drinking water issue nimal rahavan shocking video