மது போதையில் மனைவி கொலை., திருவண்ணாமலையில் நடந்த கொடூரம்..!!
Police have arrested the husband who killed his drunken wife
மது போதையில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆலத்தூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு திருமணமாகி ஷைலா என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 10 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
முருகன் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதனால், தினமும் வீட்டிற்கு குடித்து விட்டு வந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று வழக்கம் போல முருகன் குடித்துவிட்டு வந்து தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து நல்ளிரவில் தூங்கி கொண்டிருந்த ஷைலா மீது அம்மிகல்லை போட்டு கொலை செய்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கதினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மருத்துவமனிக்கு அனுப்பிவைத்தனர். முருகனை கைது செய்து அவரிடம் விசரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Police have arrested the husband who killed his drunken wife