இளம்பெண் கழுத்தை நெறித்து கொலை., கணவனுக்கு வலை வீச்சு...!! - Seithipunal
Seithipunal


மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம், போடி நாயக்கனூரை சேர்ந்தவர் அருண்குமார். இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவருக்கும் அந்த கம்பெனியில் வேலை செய்து வந்த வைஷ்ணவி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்ப்பட்டது.

இருவரும் காதலித்து வந்ததால் இருவருக்கும் கடந்த 1 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் வைஷ்ணவியை தாய் வீட்டில் விட்டு விட்டு அருண்குமார் போடிநாயக்கனூருக்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து  சில தினங்களுக்கு முன் திருப்பூர் வந்த அருண்குமார் மனைவியுடன் தனியே ஒரு வீட்டில் குடும்பம் நடத்த தொடங்கினார்.

இந்நிலையில் , சம்பவதன்று நீண்ட நேரமாகியும் அருண்குமார் வீடு திறக்கபடவில்லை. இதனால், அருகில் உள்ளவர்கள் வீட்டின் கதவை திறந்தபார்த்த போது வைஷ்ணவி பிணமாக கிடந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர் இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வைஷ்ணவியின் கழுத்தில் காயம் இருப்பதால் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராற்றால் அருண்குமாரே வைஷ்ணவியை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police are searching for the husband who killed his wife


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->