வரதட்சணை கொடுமையால் பெண் கொலையா? காவல்துறை தீவிர விசாரணை.. வேலூர் அருகே பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


குடும்ப பிரச்சனை காரணமாக பெண் கொலை செய்யப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், ஓங்கபாடி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரின் மனைவி பிரிந்து சென்றதால் ஆம்பூர்  அடுத்த  மேல்சானங்குப்பம்  கிராமத்தை  சேர்ந்த சத்யா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஆறு மாதத்திற்கு முன் தனது குடும்பதாருக்கு போன் செய்த சத்யா தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ஓங்கபாடி வந்த சத்யாவின்  குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று மறுபடியும் அவரது குடும்பத்தினருக்கு போன் செய்த அவர் தன்னை வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், அப்போது பேசுய ரவி அவரை இரண்டு நாட்களில் அழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இன்று காலை ரவியின் உறவினர்கள் அழைத்து சத்யா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக ஓங்கபாடி சென்றனர். அங்கு சத்யா அறையில் சடலமாக கிடந்தார். ரவி அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

ஆனால், அவர் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் காவல்நிலையத்தில் முற்ருகையிட்டனர். இதனை அடுத்து அவர்களை பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். சத்யாவின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ரவியிடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரதட்சணை கொடுமை காரணமாக பெண் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police are investigating about Woman Death Near vellore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->