மிரளவைக்கும் மக்களவைத் தேர்தல் - தமிழகத்தில் களமிறங்குகிறார் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலைமுன்னிட்டு அரசியல் கட்சியினர் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜகாவும், தீவிர களப்பணியாற்றி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து, வருகிற 9-ந்தேதி பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். 

மேலும், சென்னையில் பிரமாண்டவாகன அணிவகுப்பு நடத்த பா.ஜனதா திட்டமிட்டிருப்பதாகவும், தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் உள்ளிட்டோருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

பிரதமர் மோடியின் பயண திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி நீலகிரி, பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pm modi come in tamiladu for election campaighn


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->