கள்ளக்காதல் தந்த வக்கிர புத்தி...காதலியின் 13 வயது மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது...!
perverted mind born false love young man who harassed his girlfriend 13 year old daughter arrested under POCSO Act
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், திருமணமான 42 வயது பெண்ணுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ள உறவாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அந்த பெண்ணுக்கு 9-ஆம் வகுப்பு பயிலும் 14 வயது மகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிகண்டன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்ததுடன், வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், சிறுமியின் கண்முன்னேயே இருவரும் நெருக்கமாக பழகிய சம்பவங்கள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், அடங்காத ஆசையால் மணிகண்டன், அந்த 14 வயது மாணவியிடமும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், இச்சம்பவங்கள் தாயின் முன்னிலையிலேயே நடந்ததாகவும் கூறப்படுவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், மாணவியின் தாய் இதனை தட்டிக்கேட்காமல் அமைதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி, மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தகவல் அறிந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மாணவியை மீட்டு பாதுகாப்பாக அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன் மற்றும் மாணவியின் தாய் ஆகிய இருவரையும் காவலர்கள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
perverted mind born false love young man who harassed his girlfriend 13 year old daughter arrested under POCSO Act