மக்களே உஷார்.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
People be cautious Red alert warning for 4 districts
கேரளாவில் நாளை மழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்,கேரளாவில் 22-ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது.
கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி .நெல்லை .தென்காசி. நீலகிரி.தேனி திண்டுக்கல். கோயம்புத்தூர். போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது .சென்னையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் நாளை மழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்,கேரளாவில் 22-ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது.
நாட்டில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழையானது, 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளாவில் முன்கூட்டியே பெய்ய தொடங்கியது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், கேரளாவின் கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழை பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளது.
இந்த 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன்படி, கேரளாவில் நாளை மழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நாளை வடக்கு கேரளாவில் உள்ள காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடப்பட்டுள்ளது. இதேபோன்று, 22-ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
English Summary
People be cautious Red alert warning for 4 districts