பரந்தூர் விமான நிலையம்: அடுத்தகட்ட திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை! - Seithipunal
Seithipunal


பரந்தூர் புதிய விமான நிலையம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர், உயர் நிலை அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் திட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

தற்போது நிலவியிருக்கும் நில உரிமை, மக்கள் எதிர்ப்பு உள்ளிட்ட சிக்கல்களை சரிசெய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தில், தேவையான நிலங்களை அரசு தற்போது கையகப்படுத்தி வருகிறது.  

தமிழக தொழில்துறைக்கு முக்கிய தூண்டுகோளாகக் கருதப்படும் இந்த திட்டம், தமிழகத்தின் முதலீட்டு சூழலை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசு தெரிவிக்கின்றது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Parandur Airport TN Govt cm MK Stalin


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->