சூதாட்ட செயலி நிறுவனங்கள் மூலம் ரூ.50 கோடிக்கு மேல் பண பரிமாற்றம்? கிரிக்கெட் வீரர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை!
Over Rs. 50 crore money transfer through betting app companies? Enforcement department inquiry into cricketers
சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ், ரெய்னா, ஹர்பஜன் சிங்கிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திவருகிறது.
சட்ட விரோத சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் செய்து பிரபலப் படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக தெலுங்கானா போலீசார் ஏற்கனவே நடிகர் ராணா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 25 நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்தி ருந்தது.
இதையடுத்து சூதாட்ட செயலிகள் மூலம் நாட்டில் ஏராளமான சட்ட விரோத செயல்கள் நடைபெற்றுவருவதாக சுப்ரீம் கோர்ட் டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.மேலும் நாட்டு மக்களை காப்பாற்ற வும், இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றவும் இது போன்ற செயலிகளை தடை செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் டில் தெரிவிக் கப்பட்டது.மேலும் சூதாட்ட செயலிகள் தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில் சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கள் யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இதேபோல நடிகர் சோனு சூட், நடிகை ஊர்வசி ரவுதேலா ஆகியோரிடமும் அமலாக்கத் துறை அதிகாரி கள் விசாரணை மேற் கொண்டனர்.விளம்பர பிரசாரத்துக் காக இந்த சூதாட்ட செயலிகள் பல்வேறு நிறுவனங் களுக்கு ரூ.50 கோடிக்கு மேல் பணம் செலுத்தியதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
English Summary
Over Rs. 50 crore money transfer through betting app companies? Enforcement department inquiry into cricketers