ஜான் குமாரை அமைச்சராக்க எதிர்ப்பு... இளைஞர் காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு!
Opposition to make John Kumar a minister Youth Congress announces protest
பொது சொத்தை சட்டத்திற்கு புறம்பாக அபகரித்த ஜான் குமாரை அமைச்சராக அமர்த்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் தலைமையில் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:புதுச்சேரி என்றாலே ஆன்மீக பூமி இது அனைவரும் நன்கு அறிந்தது. நம்முடைய புதுச்சேரியில் அனைத்து மதத்தினருக்கும் வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்கள் உள்ளது அந்த வகையிலே புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது அந்த இடத்திற்கு சொந்தமான இடங்கள் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் உள்ளது. குறிப்பாக காமராஜர் நகர் தொகுதியில் உள்ள ரெயின்போ நகரில் இந்த கோவிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான இடம் உள்ளது. இந்த இடத்தை அந்தத் தொகுதி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் இரண்டு வருடங்களுக்கு முன்பாக அவருடைய பெயரிலும், அவருடைய குடும்பத்தார் பெயரிலும் சட்டத்திற்கு புறம்பான வகையில் பத்திரப்பதிவு செய்து கொண்டார். இதனை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பாக என்னுடைய தமிழிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாங்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தினோம் பிறகு நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றம் அந்த இடத்தை மீண்டும் கோயிலுக்கு ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து அந்த இடத்தை மீண்டும் கோவிலுக்கு ஒப்படைத்தார்.
இதற்கிடையிலே அந்த இடம் கோயிலுக்கு சொந்தமான இடம் என்றும் நிரூபித்தால் நான் இரண்டு கோடி ரூபாய் கொடுப்பேன் என்று சவால் விட்டிருந்தார். அந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று நாங்கள் பல கட்ட போராட்டம் நடத்தி நீதிமன்ற வாயிலாக அதனை கோவிலுக்கு திரும்ப பெற்று கொடுத்திருக்கின்றோம்.
இதற்காக ஜான் குமார் காங்கிரஸ் கட்சியுக்கு இரண்டு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். மேலும் கோயில் நிலத்தை சட்டத்திற்கு புறம்பாக தன் குடும்பத்தாருக்கு பதிவு செய்வதற்காக அவர் புதுச்சேரி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் அதனை பாரதிய ஜனதா கட்சி ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் நிலத்தை அபகரித்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு தற்பொழுது அமைச்சர் பதவி கொடுக்க தயாராக உள்ளனர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் இன்று தனது பதவியில் மேலிடத்தின் நிர்பந்தத்தால் ராஜினாமா செய்துள்ளார்.
அப்படி ராஜினாமா செய்த அந்த அமைச்சர் பதவி மற்றொரு தலிதிற்கு தான் வழங்க வேண்டும் இல்லை என்றால் N.R மற்றும் பிஜேபி கூட்டணி கட்சிகள் தலித் மக்களை அவமதிப்பதாக எடுத்துக் கொள்ளப்படும்.
மேலும் இது போன்று பொது சொத்தை சட்டத்திற்கு புறம்பாக அபகரித்த ஜான் குமாரை அமைச்சராக அமர்த்தக் கூடாது என்று இளைஞர் காங்கிரஸ் சார்பாக என்னுடைய தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற இருக்கின்றது என தெரிவித்தனர்.
English Summary
Opposition to make John Kumar a minister Youth Congress announces protest