சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை முயற்சி.. ஒருவர் உயிரிழப்பு..!! - Seithipunal
Seithipunal


சென்னை ஐஐடியில் படித்து வந்த மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஶ்ரீவன் சன்னி எனும் மாணவன் தான் தங்கி இருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஶ்ரீவன் சன்னி கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டீபன் சன்னி சென்னை ஐஐடியில் முதுநிலை ஆராய்ச்சி படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதே சென்னை ஐஐடி வளாகத்தில் மற்றொரு மாணவன் அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட சக மாணவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இவரது தற்கொலை முயற்சி குறித்தும் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றது சென்னை ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

one student dies another students attempt suicide in Chennai IIT


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->