சத்தியமங்கலத்தில் 1 கிலோ மல்லிகைப் பூ 490 ரூபாய்க்கு விற்பனை.! - Seithipunal
Seithipunal


சத்தியமங்கலத்தில் 1 கிலோ மல்லிகைப் பூ 490 ரூபாய்க்கு விற்பனை.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே கரட்டூர் சாலையில், பூ சந்தை உள்ளது.  பல பகுதிகளில் இருந்து இந்த பூ சந்தைக்கு பூக்கள் கொண்டுவரப்படுகிறது. 

இந்த பூ சந்தையில், தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும். இந்த நிலையில், வழக்கம் போல் நேற்று காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது. 

இதற்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.490-க்கும், முல்லை ரூ.140-க்கும், காக்கடா ரூ.825-க்கும், செண்டுமல்லி ரூ.55-க்கும், பட்டுப்பூ ரூ.69-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.80-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கு ஏலம் விடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one kg jasmine flower 490 rupees at saththiiyamangalam market


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->