கலைஞர் பிறந்த நாள் விழா..பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர், நாசர்!
On the occasion of the artists birthday celebration the minister Nasser provided welfare scheme assistance to the public
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி திமுக சார்பில் நடைபெற்ற இலவச கண்ணொளி மற்றும் கண் சிகிச்சை முகாமில் அமைச்சர், சா.மு.நாசர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க,மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி,மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர், அண்ணன் திரு ஆவடி சா.மு.நாசர் M.L.A அவர்கள்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு சுரேஷ்குமார் அவர்கள் ஏற்பாட்டில் இலவச கண்ணொளி மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் கண்ணொளி மற்றும் கண் சிகிச்சை முகாம் நிகழ்ச்சியில் பங்கேற்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சாதனைகளை விளக்கியும், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்களுக்குமாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர், அண்ணன் திரு ஆவடி சா.மு.நாசர் நன்றி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திருஆ.கிருஷ்ணசாமி மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திரு பிரபு கஜேந்திரன் மாவட்ட அவை தலைவர் திரு ராஜி மாநகர , ஒன்றிய, நகர,கழகசெயலாளர்கள் திரு தேசிங்கு திரு கமலேஷ் திரு சன்பிரகாஷ் மாநகர மேயர் திரு உதயகுமார் மற்றும்,அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
English Summary
On the occasion of the artists birthday celebration the minister Nasser provided welfare scheme assistance to the public