ஏரிகளில் உள்ள தண்ணீரை அகற்றிவிட்டு மீன் பிடிப்பதா.. மக்கள் குரல் ராஜா கண்டனம்!  - Seithipunal
Seithipunal


வேல்ராம்பட்டு ஏரி அதன் அருகில் பக்கத்தில் இருக்கும் ஏரி இவைகள் இரண்டும் முழு கொள்ளளவு தண்ணீர் நிரம்பி இருந்தன இன்று அந்த தண்ணீரில் அனைத்தையும் அகற்றிவிட்டு அங்கு உள்ளவர்கள் மீன்பிடிப்பிற்காக பயன்படுத்திக் கொண்டு வருகின்றார்கள்  என மக்கள் குரல் தோழர் டிவி நகர் ராஜா குற்றசாட்டியுள்ளார்.

 

இதுகுறித்து மக்கள் குரல் தோழர் டிவி நகர் ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களே மாண்புமிகு துணைநிலை ஆளுநர்  அவர்களே மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் புதுச்சேரி மக்கள் சார்பாக ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றோம்,

 கோரிக்கை என்னவென்றால் புதுச்சேரி முழுவதும் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க கூடிய ஏரி குளம் குட்டை இவைகள் அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டிக் கொண்டுள்ளார்கள் இந்த ஆக்கிரமிப்பு சம்பந்தமாக எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் கேட்பதில்லை ஏனென்றால் கேட்டால் ஓட்டு வாங்கி போய் விடுமோ என்ற அச்சத்தில் கேட்பதில்லை இது புதுச்சேரி மக்கள் அனைவரும் அறிந்ததே, ஆனால் இப்பொழுது குறைந்தபட்சம் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்கும்  ஏரி குளங்களை காப்பாற்றுவதற்கு புதுச்சேரி அரசாங்கம் நல்லதொரு தீர்வு காண வேண்டும் என்று புதுச்சேரி மக்கள் எதிர்பார்க்கின்றோம்,

 மேலும் புதுச்சேரி மையப்பகுதி அமைந்துள்ள வேலராம்பட்டு ஏரி அதன் அருகில் உள்ள ஏரி முழுவதும் பரவலாக தண்ணீர் இருந்தன சமீபத்தில் புதுச்சேரி அரசாங்கம் பொதுப்பணித்துறை மூலமாக ஒரு தவறான சிந்தனையுடன் சில தற்குறி பொறியாளர்களை வைத்து வேல்ராம்பட்டு ஏரி நடுவில் அப்பகுதி சுற்றியுள்ள கழிவுநீர் வாய்க்கால் செல்வதற்கு வழிவகை செய்தார்கள் இது தவறு என்று சொல்லி புதுச்சேரி அரசாங்கத்துக்கும் பொதுப்பணித்துறை தற்குறி அதிகாரிகளுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவர் மதிப்புக்குரிய தோழர் லோகு ஐயப்பன் அண்ணன் அவர்கள் தலைமையில் ஒட்டுமொத்த இயக்கத் தோழர்கள் ஒன்றிணைந்து அந்த கழிவு நீர் வாய்க்காலை கட்டுவதை தடுத்து நிறுத்தினார்கள்.

 அதன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிட விடுதலை கழகத்தின் தலைவர் லோகு ஐயப்பன் அண்ணன் அவர் தலைமையில் ஒரு வழக்கு பதிவு செய்து வழக்கு நிலவில் இருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் அனைத்து பகுதியில் உள்ள ஏரி குளம் குட்டை முழுவதும் தண்ணீர் நிரம்பி வைந்தன அந்தத் தண்ணீர் நிரம்பி வந்த நமது வேல்ராம்பட்டு ஏரி அதன் அருகில் பக்கத்தில் இருக்கும் ஏரி இவைகள் இரண்டும் முழு கொள்ளளவு தண்ணீர் நிரம்பி இருந்தன இன்று அந்த தண்ணீரில் அனைத்தையும் அகற்றிவிட்டு அங்கு உள்ளவர்கள் மீன்பிடிப்பிற்காக பயன்படுத்திக் கொண்டு வருகின்றார்கள் .

இந்த செயலை புதுச்சேரி அரசாங்கம் உடனடியாக தடுத்து நிறுத்தி இனிவரும் காலங்களில் அந்த இடத்தில் மீன் பிடிப்பதற்கு குத்தகை விடக்கூடாது என்பதையும் நீர் நிலையங்கள் முழுமையாக பாதுகாக்க வேண்டும் எனவும் புதுச்சேரி அரசாங்கத்தை புதுச்சேரி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம். இன்று தண்ணீருக்கு மிகவும் தட்டுப்பாடாக இருக்கின்றது நீர்நிலைகளை பாதுகாத்தால் தண்ணீருக்கு பஞ்சம் வராது என்பதனையும் அரசு கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் வேல்ராம்பட்டு எரியும் அதன் அருகில் உள்ள ஏரியும் அழகுப்படுத்தி அதை ஒரு சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் ஐயா அவர்களையும் மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்களையும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களையும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் புதுச்சேரி மக்கள் சார்பாக மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் மக்கள் குரல் தோழர் டிவி நகர் ராஜா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is it fishing after draining the water from the lakes? Peoples voices condemn the king


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->