இரயில் பயணம் செய்பவரா நீங்கள்? 2½ கோடி போலி கணக்குகள்! இனி ஆதார் அட்டை கட்டாயமாகும் வாய்ப்பு!
Train passengers Aadhaar Card Railway
சமீபத்தில் இரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் போது பயணிகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
டிக்கெட்டுகள் (பயணச் சீட்டு) சில நாட்களிலேயே முடிந்து, காத்திருப்புப் பட்டியலுக்கு செல்லும் நிலை உள்ளது. தட்கல் டிக்கெட்டுகளும் சில நிமிடங்களில் முடிந்து விடுகிறது. இடைத்தரகர்களின் முறைகேடு காரணமாக, பலரும் டிக்கெட் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இதையடுத்து, இரயில்வே 2½ கோடி போலி கணக்குகளை முடக்கியது. மேலும், டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அடிப்படையிலான ஓ.டி.பி முறை விரைவில் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், போலி ஆதார் அட்டைகள் பயணத்திலும், இரயில்வே தங்குமிடங்களிலும் பயன்படுத்தப்படுவதாக பல புகார்கள் வந்துள்ளன. இதைத் தடுக்கும் நோக்கில், "எம்ஆதார்" செயலியில் பயணிகளின் ஆதார் விவரங்களை சரிபார்க்க அதிகாரிகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்றை காண்பித்தால் போதும். ஆனால் எதிர்காலத்தில், ஆதார் அட்டை கட்டாயமாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
English Summary
Train passengers Aadhaar Card Railway