"நலம் காக்கும் ஸ்டாலின்" விரைவில் தமிழகம் முழுவதும் - அமைச்சர் கொடுத்த அப்டேட்!
TNGovt MK Stalin Nalan Kaakkum Stalin
தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் இன்னும் ஒரு-இரு வாரங்களில் தொடங்கும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் இலவச உடல் பரிசோதனையுடன் செயல்பட உள்ளது. மக்கள் முழுமையாக உடல் பரிசோதனை செய்யலாம்; இதில் சக்கரை அளவு, ரத்த அழுத்தம், எக்ஸ்ரே, இசிஜி, எக்கோ, புற்றுநோய், காசநோய், தொழுநோய் பரிசோதனைகள், மேலும் 15 சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.
ரூ.13.58 கோடியில் ஆண்டு முழுவதும் 1,256 உயர் மருத்துவ முகாம்கள் நடக்கவிருக்கின்றன. ஒவ்வொரு முகாமுக்கும் ரூ.75,000 என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ₹9.42 கோடி தேசிய சுகாதார திட்டம் மற்றும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் வழியாக வழங்கப்படும்; மீதமுள்ள ₹4.15 கோடி மாநில நிதியில் இருந்து உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊரகங்கள், குடிசைப் பகுதிகள், பழங்குடி பகுதிகள் ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்படும். சனிக்கிழமைகள் அல்லது தகுந்த நாட்களில் இந்த முகாம்கள் நடத்தப்படும்.
சென்னைக்கு சிறப்பான பங்கு உள்ளதாகவும், தமிழகம் மருத்துவ சேவையில் முன்னோடியாக திகழ்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
TNGovt MK Stalin Nalan Kaakkum Stalin