11 ம் தேதி  ஈரோடு செல்கிறார் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


வருகிற 11 ம் தேதி அன்று ஈரோடு மாவட்டம் வருகை தரும் தமிழக முதல்வர் வேளாண் துறை மற்றும் வேளாண்மை கருத்தரங்ககில் பங்கேற்கிறார். அதற்காக முன் ஏற்பாடு நிகழ்ச்சிகளை எம் ஆர் கே பன்னீர்செல்வம்,முத்துசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். 

திமுக அரசு பொறுப்பேற்று நான்காண்டு முடிவடைந்து ஐந்தாவது ஆண்டு ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி முடிவதற்கு இன்னும் ஒரு ஆண்டு மீதமுள்ள நிலையில் தமிழக்தில் 2026 சட்டசபை தேர்தல் நடைபெறயுள்ளது. ஆகையால் திமுக அரசு தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தீவீரபடுத்தி உள்ளது. அதற்காக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில்

வருகிற 11 ம் தேதி அன்று ஈரோடு மாவட்டம் வருகை தரும் தமிழக முதல்வர் வேளாண் துறை மற்றும் வேளாண்மை கருத்தரங்ககில் பங்கேற்கிறார். அதற்காக முன் ஏற்பாடு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை   அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்,தமிழக வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் சு முத்துசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

 நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஐ ஏ எஸ்  தோட்டக்கலை - மலை பயிர்கள் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார் வெங்கடாசலம் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், தி மு க கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

On the 11th Chief Minister M. K. Stalin will be going to Erode


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->