சாதி அடிப்படையிலான ஒதுக்குமுறை: நடவடிக்கை எடுக்காத போலீசார்! காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பட்டியலினத்தவர் மீது தீண்டாமை உள்ளிட்ட சாதி அடிப்படையிலான வன்கொடுமை நடப்பதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாநகர காவல் ஆணையர் அருண் ஜூன் 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை வி.வானமாமலை என்பவர் தொடர்ந்துள்ளார். அவர் மனுவில், "நான் நாங்குநேரியை சேர்ந்த பட்டியலினத்தவராக சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன். அங்கு சிலர் என்னை சமூக நிகழ்வுகளுக்கு அழைக்காமல், புறக்கணித்து தீண்டாமை போல நடந்துகொள்கிறார்கள்.

போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பின்னர் தேசிய பட்டியலின ஆணையத்திலும் புகார் அளித்தேன். ஆனால் அதிலும் சாலிக்கட்டபோல் நடந்துகொண்டுள்ளனர்" என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த மனு மீது நீதிபதி பி.வேல்முருகன் விசாரணை நடத்தியபோது, மனுதாரருக்கு சார்பாக வழக்கறிஞர் ஜி.சரவணக் குமார், அரசு சார்பில் குற்றவியல் வழக்கறிஞர் சி.இ.பிரதாப் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

வாதங்களை ஏற்று, இவ்வழக்கில் நேரடி விளக்கம் பெற மாநகர காவல் ஆணையர் ஜூன் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Arun IPS Caste abuse case HC Order


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->