மாற்றுத்திறனாளி பெண் 8 மாத கர்ப்பம்.! முதியவர் கைது.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் 40 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண். இவருக்கு திடீரென நேற்று அதிகாலை வயிற்று வலி ஏற்பட்டதால், சிகிச்சைக்காக உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், அந்தப் பெண் 8 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் பிரசவ வாடில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வீரானம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த சடையன்(63) என்பவர் மாற்றுத்திறனாளிப் பெண்ணை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சடையனை கைது செய்து மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Oldman arrested for pregnanting Disabled woman in salem


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->