சமையல் எரிவாயு கசிவால் தீ விபத்து - முதியவர் பலி - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூடியவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி(61). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது தெரியாமல் இன்று அதிகாலை அடுப்பை பற்ற வைத்துள்ளார்.

அப்பொழுது திடீரென தீ ஏற்பட்டு வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும் சிவசாமியும் தீயில் சிக்கியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சாத்தூர் தீயணைப்புத்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

ஆனால் அங்கு சிவசாமி தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Old man died in a fire caused by a cooking gas leak in satur virudhunagar


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->