மகனின் கண் முன்னே உயிரிழந்த தாய்.. சேலம் அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மாடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் பயணித்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனபாக்கியம் இவர் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் அந்தியூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார் அப்போது அந்தியூர் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது மாடு ஒன்று திடீர் குறுக்கே வந்துள்ளது.

இதனால் பாலகுமாரன் பிரேக் போட்டதால் நிலை தடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர். இதில் தனபாக்கியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த பாலகுமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old lady Death in accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->