சென்னை || பிழைக்க வந்த இடத்தில் வடமாநில வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை || பிழைக்க வந்த இடத்தில் வடமாநில வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்.!

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அசன் அலி. இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு வந்தார். அதன் படி சென்னையில் அவருக்கு கட்டுமான வேலை கிடைத்த நிலையில், நேற்று முன்தினம் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள கோயில் ஒன்றின் மேலே கண்ணாடி பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அசன் அலி 20 அடி உயரத்தில் இருந்து கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் அசன் அலியை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அசன் அலி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள் வருகின்றனர். கோவில் கட்டுமானப் பணியின் போது வாலிபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

north state youth died in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->