பத்திரப் பதிவில் தொடரும் முறைகேடுகள்... முற்றுப்புள்ளி வைக்குமா அரசு...? - வானதி சீனிவாசன் அதிரடி தாக்கு...! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், ஆயக்குடி பகுதியில் கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்திற்குச் சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் ரூ.9 லட்சத்திற்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தேசிய பா.ஜ.க. மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில், இந்த நிலப்பதிவு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுவதாக தெரிவித்துள்ளார்.மேலும், பழனி கோவில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான நிலம் தொடர்பான முறைகேடு புகாரில் ஏற்கனவே பெயர் இடம்பெற்ற சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்தான், தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலத்தையும் பதிவு செய்ததாக கூறப்படுவது அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், பழனி பத்திரப்பதிவாளருக்கு அறிவுறுத்தியிருந்ததாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.இருப்பினும், அந்த அறிவுறுத்தலுக்குப் பின்னரும் கடந்த மாதம் குறிப்பிட்ட நிலம் தனிநபர் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல், பத்திரப்பதிவுத்துறையின் செயல்பாடுகள் மீது பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலம் தொடர்பான ஆவணங்கள் பெரும்பாலும் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், போலியான ஆவணங்கள் மூலம் நிலப்பதிவு நடைபெற்றதாக புகார் எழுந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு வராமல் செயல்படுவது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் எழுவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான சொத்துகள் தனிநபர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டதாக தொடர்ந்து புகார்கள் எழுவது கவலைக்குரிய விஷயம் என்றும், இதுபோன்ற முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடுமையான நடவடிக்கை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பத்திரப்பதிவு நடைமுறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை இல்லாததும், பொதுமக்களுக்கு எளிதில் புரியாத வகையில் சில நடைமுறைகள் இருப்பதும் முறைகேடுகளுக்கு வாய்ப்பளிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில் நிலங்களையும் சிறப்புக் குழு அமைத்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிலங்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், மடங்களுக்கு சொந்தமான நிலங்களும் தனிநபர்களின் பெயர்களில் முறைகேடாக பதிவு செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கோவில்கள் மற்றும் மடங்களின் சொத்துகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will government put an end irregularities registration deed Vanathi Srinivasan attack


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->