தமிழகத்தில் இனி இது இல்லை என்றால்., பெட்ரோல் இல்லை.! அதிரடி அறிவிப்பு.!
no mask no petrol
வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிவரை தமிழகத்தில் கொரோனா கட்டுப்பட்டு வழிமுறைகளில் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நாட்டில் நாளுக்குநாள் கொரோனா பரவும் தாக்கத்தை கருத்தில் கொண்டு, கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன், ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏப்.10ம் தேதி முதல் முகக்கவசம் அணிந்து வராவிட்டால் பெட்ரோல், டீசல் விநியோகம் கிடையாது என்று, தமிழக பெட்ரோலிய வணிகர் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.