தீவிரவாதத்துக்கு மூளைச்சலவை...4 பேரிடம் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை!
NIA intensifies investigation with 4 people for the mastermind behind terrorism
இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த மேலும் 4 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்,
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கோவை உக்கடத்தில் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே கார் ஒன்று வெடித்து சிதறியதில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர் , அப்போது
முபின் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இருந்ததும், அவர் மிகப்பெரிய தாக்குதல் திட்டத்துக்கு தயாராகி வந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலரை கைது செய்து உள்ளனர். இதையடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக எ அரபி கல்லூரி நிறுவனர் ஜமீல் பாட்ஷா, இர்ஷாத் செய்யது, அப்துர் ரகுமான், முகமது உசேன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கோவை அரபிகல்லூரி முதல்வரான அகமது அலி, ஊழியரான உக்கடம் ஜவஹர் சாதிக், பழனியை சேர்ந்த ராஜா முகமது மற்றும் சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த சேக் தாவூத் ஆகிய 4 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் கைதானவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான 4 பேரும் சென்னை அரபி கல்லூரி நிறுவனரான ஜமீல் பாட்ஷாவுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.ஏற்கனவே கைதானவர்கள் இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்துள்ளனர். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்க இளைஞர்கள் மற்றும் மாணவர்களை மூளைச்சலவை செய்ததாகவும், அது குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எத்தனை பேர் மூளைச்சலவை செய்யப்பட்டனர் என்று கைதான 4 பேரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
NIA intensifies investigation with 4 people for the mastermind behind terrorism