திருமணமான மூன்றாவது நாளில் புதுமணத் தம்பதியினர் வெட்டிக் கொலை.!
new married couples murder in thoothukudi
தூத்துக்குடியில் முருகேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிசெல்வம். கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவர் தன்னுடன் படித்து வந்த கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்த தகவல் பெண்ணின் பெற்றோர் தெரிய வர அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், இருவரும் கடந்த திங்கள்கிழமை கோவில்பட்டியில் திருமணம் செய்து கொண்டதைத்தொடர்ந்து கார்த்திகாவை மாரிசெல்வம் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இந்த நிலையில் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், மாரிசெல்வத்தின் வீட்டிற்குள் புகுந்து இருவரையும் சரமாரியாக வெட்டி, கொலை செய்து விட்டு தப்பித்துச் சென்றனர்.

இந்தக் கொலையை செய்தவர்கள் பெண்ணின் உறவினர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைப்பட்டுள்ளது. அதன் படி போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
new married couples murder in thoothukudi