#நெய்வேலி | பெண்களை வைத்து விபச்சாரம் - பாஜக நிர்வாகி கைது! - Seithipunal
Seithipunal


கடலூர் அருகே பெண்களை வைத்து விபசாரம் செய்த புகாரில் பாஜக நிர்வாகி ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த வடக்குத்து பகுதியில் விபச்சாரம் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள வேட்டை போலீசார் சோதனை செய்ததில் அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்றது உறுதியானது.

இதுசம்மந்தமாக் பெண் ஒருவரை கைது செய்துள்ள போலீசார், கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓ.பி.சி. அணி பொதுச் செயலாளர் என்று சொல்லப்படும் ராம்குமார் என்பவரையும் கைது செய்துள்ளனர்.

முதல்கட்ட தகவலின்படி, வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் 3 பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.


மேலும் ஒரு முக்கிய செய்தி : காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க சென்ற காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

11 மீனவர்கள் இருந்த படகில் 7 பேரை கடலில் தள்ளியதாகவும், 4 பேர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் புகார்; படகில் இருந்த ஜி.பி.எஸ். கருவி, வலைகளை எடுத்துச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Neiveli vadakuththu BJP ramkumar arrest


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->