நீட் தேர்வு முடிவு தேதி வெளியீடு! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவு வரும் 14ம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும்  நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக மாணவர்களுக்கு 'நீட்-யூஜி தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவருகிறது,அந்தவகையில் இந்த ஆண்டுக்கான நீட்-யூஜி 2025' தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தியது.இதில் நாடு முழுவதும் இருந்து சுமார் 20 லட்சம் மாணவர்கள் தேர்வை  எழுதினர்.

 இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டது.
மாணவர்கள் இந்த விடைக்குறிப்பின் மீது தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்தது. மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளைப் பரிசீலித்த பிறகு, இறுதி விடைக்குறிப்புதயாரிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளும், தகுதிப் பட்டியலும் வெளியிடப்படும்.

இந்நிலையில், நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை  வரும் 14ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமைஅதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ இந்த என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய, மாணவர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, 'NEET UG 2025 Result' என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவு பிடிஎப் வடிவில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவிகித இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு குழு கலந்தாய்வை நடத்தும். மீதமுள்ள 85 சதவிகித இடங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் கலந்தாய்வை நடத்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NEET exam result date announced


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->