திருவாரூர் : தூங்கும் போது விஷப்பூச்சி கடித்து சிறுமி உயிரிழப்பு.!  - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி அருகே திட்டாணிமுட்டம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மனைவி வேதநாயகி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், ராஜேஷ் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். 

இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது தூங்கிக்கொண்டிருந்த தட்சயாவை விஷப்பூச்சி கடித்ததால் அழுதுள்ளார். குழந்தை அழுவும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து குழந்தையை சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. 

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் வேதநாயகி போலீசிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷப்பூச்சி கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near tiruvarur girl died for poisonous insect biten


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->