பழிக்கு பழி தீர்க்க நீதிமன்ற வளாகத்தில்.. விரட்டி விரட்டி நிகழ்ந்த கொலை.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் சிவகிரி அருகே  ஜாமீனில் வெளிவந்தவரை பட்டப் பகலில் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே  தேவிப்பட்டினத்தைச் சார்ந்தவர் செல்வகுமார். இவர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து  ஜாமீனில் வெளிவந்தவர். தன்னுடைய அண்ணன் மகளை கேலி செய்தவரை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் அவர் சிவகிரி நீதிமன்றத்திற்கு வழக்கிற்கு ஆஜராக சென்று கொண்டிருந்தபோது சிவகிரி மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவரை ஒரு மர்ம கும்ப கும்பல் சுற்றி வளைத்தது. அவர்களிடமிருந்து தப்பி  அருகிலிருந்த தோப்பிற்குள் ஓடி  தப்பிக்க முயன்றார் செல்வகுமார். ஆனாலும் அவரை விடாமல் பின் தொடர்ந்து கும்பல் சரமாரியாக வெட்டி வீழ்த்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையின் விசாரணையில்  செல்வக் குமாரால் கொலை செய்யப்பட்ட சிவகுமாரின் நண்பர்கள் பழிக்குப் பழியாக இந்த கொலை சம்பவத்தை செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து விசாரணையை முடுக்கிய காவல் துறை சிவகுமாரின் நண்பர்கள் நான்கு பேரை இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்து இருக்கிறது. அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. கோர்ட்டிற்கு விசாரணைக்காக சென்றவர் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near tenkasi a man was murdered by a group of people to avenge the death of their friend


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->