தங்கை இறந்த துக்கத்தில் உயிரிழந்த அக்கா - அடுத்தடுத்தடுத்து நிகழ்ந்த கோர சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி அருகே ஆத்தூர் சவேரியார் தெருவை சேர்ந்தவர் சிறுமணி. இவர் மனைவி அன்னமுத்து. இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை கேட்ட அவருடைய சகோதரி அந்தோணியம்மாள் அதிர்ச்சி அடைந்து, கணவர் செல்வராஜியுடன் சகோதரி வீட்டிற்கு வந்தார். அங்கு தங்கையின் உடலைப் பார்த்து கதறி அழுதார். 

அப்போது,  திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்தோணியம்மாளை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிலுள்ளதாக தெரிவித்துள்ளனர். தங்கை இறந்த துக்கத்தில் அக்காவும் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near dindukal two sisters died in one day


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->