கடலூரில் போலீசாருக்கு கொலை மிரட்டல் - தந்தை உள்பட 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கே.கே.நகர் பகுதியில் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தார். 

இதை பார்த்த போலீசார், அந்த வாலிபரை அழைத்து சோதனை செய்வதற்காக எப்.ஆர்.எஸ். செயலி மூலம் புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால், அந்த வாலிபர், புகைப்படம் எடுக்க விடாமல் போலீசாரை தடுத்துள்ளார்.

அதன் பின்னர் தனது தம்பி மற்றும் தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார். அதன் படி, அவர்கள் விரைந்து வந்து, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, ரோந்து போலீசார் தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அதன் பின்னர், போலீசார் கொலை மிரட்டல் விடுத்த கடலூர் வண்ணாரப்பாளையம் கே.டி.ஆர். நகரை சேர்ந்த முத்தையன் மற்றும் இவரது மகன்கள் முகிலன், முரளி உள்ளிட்டோரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near cuddalore three peoples arrested for kill threat to police


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->