சென்னை || சூளைமேட்டில் பிரபல ரவுடி தீக்குளித்து தற்கொலை..!
near chennai rowdi sucide
சென்னை அருகே சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி குளோரி. பிரசாந்த் அப்பகுதியில் பிரபல ரவுடியாக சுற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு பிரசாந்தின் மனைவி குளோரி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
ரவுடி பிரசாந்த் கடந்த ஆண்டு மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்தார். அதன்பின், மனைவி இறந்த துக்கம் தங்க முடியாமல் பிரசாந்த் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அருகில் உள்ளவர்கள் பிரசாந்தை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரசாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மனைவியின் முதலாமாண்டு நினைவு நாளிலேயே கனவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near chennai rowdi sucide