அது என்ன ஹசீஸ்..? மதிப்பு மட்டும் ரூ.110 கோடியாம் .. சிக்கிய Drug கும்பல்.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இறால் பண்ணையில் ரூ.110 கோடி மதிப்பிலான ஹசீஸ் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. படகுகள் மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த நிலையில் மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோன்று ரூ.1.05 கோடி மதிப்பிலான 874 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக சுல்தான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 

மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட 100 கிலோ ஹசீஸ் போதைப் பொருள் மற்றும் 874 கிலோ கஞ்சா ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பலகோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NCB seized 100kg hussies drug in Pudukkottai


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->