நளினிக்கு ஒரு மாதம் பரோல்- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்...! - Seithipunal
Seithipunal


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கில்  சிறையில் இருக்கும் நளினியின் தாயார் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் தனக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் தனது மகளை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்குமாறு தெரிவித்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணையின் போது நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nalini Gets One month parole


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->