பள்ளத்தில் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கிய கார்: உடல் நசுங்கி உயிரிழந்த பெண்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் காதர் (வயது 44) இவரது மனைவி பவினா (வயது 42) இவர்களுக்கு அப்ரா (வயது 21) என்ற மகளும் அப்துல்லாகான் (வயது 19) என்ற மகனும் உள்ளனர். 

இவர்கள் குடும்பத்துடன் நேற்று திருநெல்வேலிக்கு காரில் சென்று மீண்டும் இரவு நாகர்கோவிலுக்கு காரில் திரும்பினார். அப்போது அப்துல்லா காரை ஓட்டி சென்றார். 

நள்ளிரவு நாங்குநேரி சுங்கச்சாவடியை கடந்து தனியார் உணவகம் அருகே சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 

கார் சென்ற வேகத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து மீண்டும் கார் நேராக மாறியதால் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாங்குநேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்தில் காதர் மற்றும் அவரது மகன், மகள் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் பவினா படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வதற்குள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nagercoil car accident women dies


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->