சொத்து தகராற்றால் தந்தை கொலை... தலைமறைவான மகனுக்கு வலைவீச்சு..!
Murder Near Dharmapuri
சொத்து தகராறில் தந்தையை அழைத்துக் கொண்டு மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் மாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் விவசாயியான இவருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். கோபாலுக்கு வயதாகிவிட்டதால் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை தனது மகன் மற்றும் மகளுக்கு பிரித்து தர எண்ணினார். கடைசி இரண்டு மகள்களும் தந்தையின் சொத்து தங்களுக்கு வேண்டாம் எனக் கூற மூத்த மகளை மட்டும் சொத்தில் பங்கு கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கோபாலின் மகன் முருகேசன் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சொத்து தகராறு தொடர்பாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இருவருக்கும் இடையே மனஸ்தாபம் நிலவி வந்தது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த முருகேசன் இரும்புராடு தந்தையை அடித்தார்.
இதில், ரத்தவெள்ளத்தில் கோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள முருகேசனை தேடி வருகின்றனர். சொத்து தகராறு காரணமாக மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது