#ஈரோடு | உயிரிழந்த தாய்! குடிக்கு அடிமையான பாசமகன் எடுத்த முடிவு! - Seithipunal
Seithipunal


ஈரோடு : பெருந்துறை அருகே தாய் இறந்த துக்கத்தில் மகனும் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த அய்யகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த குமார் (வயது 34). கட்டிடத் தொழிலாளியான இவரின் தாய், ஒரு வருடத்துக்கு முன்னர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த ஆனந்த குமார் மது குடிப்பழக்கத்துக்கு ஆளாக்கினார். மேலும் மேலும், தன் தாயை நினைத்து வருந்திய ஆனந்த குமார், சம்பவம் நடந்த அன்று காலை தாயாருக்கு திதி கொடுத்துவிட்டு வீடு திரும்பவில்லை.

மறுநாள் காலை 4 மணியளவில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஆனந்த குமாரை, அவரின் மனைவி ஷகிலா தொட்டுப் பார்த்தபோது உடல் குளிர்ந்து போயுள்ளது.

இதுகுறித்து கணவனிடம் கேட்க, அவர் தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி ஷகிலா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆனந்த் குமாரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

ஆனால், அங்கு ஆனந்த குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம்  குறித்து பெருந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mothers death Son commits suicide 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->