பணம் தராவிட்டால் விளைவு கடுமையாக இருக்கும்…! ரன்வீர் சிங்கை அதிரவைத்த மிரட்டல்...! - மும்பை காவலர்கள் தீவிர விசாரணை
If you dont pay consequences severe threat that shocked Ranveer Singh Mumbai police investigating intensively
பாலிவுட்டின் எப்போதும் சிறந்த நட்சத்திரமாகத் திகழும் ரன்வீர் சிங்,அண்மையில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படத்தின் மூலம் இதுவரை இல்லாத வசூல் சாதனையை ஏற்படுத்தியிருந்தார்.

மேலும், ரசிகர்களின் கைதட்டலுடன் திரையரங்குகளில் ஓடிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கோடிகளை குவித்து சாதனை படைத்தது.இந்நிலையில், அவரது தனிப்பட்ட வாட்ஸ் அப் எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அதிர்ச்சி தரும் மிரட்டல் செய்தியை அனுப்பியுள்ளார்.
கோடிக்கணக்கான தொகையை தர வேண்டும் எனப் பணம் பறிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் ரன்வீர் சிங் தரப்பில் பெரும் கவலையை ஏற்படுத்தியதையடுத்து, உடனடியாக மும்பை காவலில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தி, ரன்வீர் சிங் வீட்டைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தினர். இதற்கு கூடுதலாக தனியார் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மிரட்டலுக்குப் பின்னால் பிரபல குற்றக் குழுவான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருக்கலாம் என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலிவுட் முன்னணி நடிகரிடம் இவ்வாறு பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம், மும்பை திரையுலகிலும் பொதுமக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
If you dont pay consequences severe threat that shocked Ranveer Singh Mumbai police investigating intensively