ட்யூன் போட்டபோதே அழுதது இந்தப் பாடலுக்குதான் – ஏ.ஆர்.ரஹ்மானின் நெகிழ்ச்சி பகிர்வு! அந்த சூப்பர் ஹிட் பாடல் எது தெரியுமா?
I cried as soon as I put the tune on this song AR Rahman resilience sharing
இசைப்புயல் A. R. Rahman உலக சினிமா அளவில் புகழ் பெற்றவராக இருந்தாலும், தமிழ் சினிமாவுடனான தனது உறவை எப்போதும் தளர விடாதவர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளராகச் சாதனை படைத்து வரும் அவர், தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருது வென்று கவனம் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட் என இசைப் பயணம் விரிந்த ரஹ்மான், Slumdog Millionaire திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்திய இசையை உலக அரங்கில் உயர்த்தினார். இதற்கு மேலாக கிராமி, கோல்டன் குளோப் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
உலக அளவில் புகழ் பெற்றாலும், “வேர்களை மறக்கக்கூடாது” என்ற எண்ணத்துடன் இன்றும் தமிழ் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். சமீபத்தில் Thug Life, Kadhalikka Neramillai போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்த ரஹ்மான், அடுத்ததாக Moon Walk என்ற படத்திற்கும் இசையமைத்துள்ளார். அந்தப் படத்தில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் திரையில் தோன்றியிருப்பதும், அனைத்து பாடல்களையும் அவரே பாடியிருப்பதும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், ரஹ்மான் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தன் இசைப் பயணத்தில் மிகவும் உணர்வுபூர்வமான தருணம் ஒன்றை பகிர்ந்துள்ளார். Vennilave Vennilave பாடலுக்கு இசையமைத்த அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், “அந்தப் பாடலில் பல உணர்வுகளை ஒரே நேரத்தில் வெளிப்படுத்த வேண்டியிருந்தது. அது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. அந்த நாட்களில் நான் நோன்பில் இருந்தேன். அப்போதுதான் அந்தப் பாடலுக்கான சரியான ட்யூன் மனதில் உதித்தது. அதை வாசித்தபோது நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டேன். இதுதான் இந்தப் பாடலுக்கு சரியான ட்யூன் என்று அப்போதே உணர்ந்தேன்” என்று கூறினார்.
மேலும் அந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள் பற்றியும் அவர் விளக்கினார். “அந்தப் பாடலில் ‘டஃப்’ என்ற பழங்கால இசைக்கருவியை பயன்படுத்தினோம். அதை பெரிதாக யாரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் அந்த உணர்வை வெளிப்படுத்த அது மிகவும் உதவியது” என ரஹ்மான் குறிப்பிட்டார்.
இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் “இப்படி ஒரு ட்யூன் வந்தால் யாருக்குத்தான் அழுகை வராது” என்று நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். உலகம் போற்றும் இசையமைப்பாளராக இருந்தாலும், ஒரு பாடலின் ட்யூன் மனதை எவ்வளவு ஆழமாகத் தொடக்கூடும் என்பதை ரஹ்மானின் இந்த பகிர்வு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
English Summary
I cried as soon as I put the tune on this song AR Rahman resilience sharing