ஆர்டிசம் பாதிக்கப்பட்ட மகனை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை.. செங்கல்பட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


ஆர்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகனை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், நெய்குப்பி பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவருக்கு திருமணமாகி கோடீஸ்வரி  என்ற மனைவியும் இரு மகள்களும் மகனும் உள்ளனர். அவர்களது மகன் அரிகரசுதன் 'ஆர்டிசம்' நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

ஆக்குபேஷன் தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரிடம் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது.  இதனால், கோடீஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று தனது மகனை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்று விட்டு கோடீஸ்வரி தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கோடீஸ்வரியின் சகோதரர் ரமேஷ் சகோதரி மற்றும் அவரது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother Killed Son and Committed Suicide


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->