#சேலம் : மொபட் மீது கார் மோதி பயங்கர விபத்து..! சம்பவ இடத்திலே தாய் - மகள் பலி...!
Mother daughter killed in moped car accident in salem
சேலம் மாவட்டத்தில் மொபட் மீது கார் மோதிய விபத்தில் தாய்-மகள் உயிரிழந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (70). இவரது மனைவி மாரியம்மாள் (60). இவர்களது மகள் பூங்கொடி (27). இந்நிலையில் இன்று காலை வெங்கடாசலம் மொபட்டில் மனைவி மாரியம்மாள் மற்றும் மகள் பூங்கொடி ஆகியோருடன் உத்தமசோழபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்பு அங்கிருந்து மீண்டும் ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலம் நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென இவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் மற்றும் பூங்கொடி ஆகிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து பலத்த காயமடைந்த வெங்கடாஜலத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Mother daughter killed in moped car accident in salem