சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


சென்னை 46வது புத்தக கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.

பொதுமக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் எண்ணத்திலும், நல்ல கருத்துக்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும் நோக்கத்திலும் தமிழக அரசின் சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த புத்தக கண்காட்சியின் மூலம் பொதுமக்களும் புத்தகப் பிரியர்களும் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி படித்து வருகின்றனர். மேலும் எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை புத்தக கண்காட்சி மூலமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதில் கடந்தாண்டு கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள 46வது புத்தக கண்காட்சி இன்று முதல் (ஜனவரி 6ஆம் தேதி) ஜனவரி 22ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் 46வது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியை தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இந்த புத்தகத் திருவிழாவிற்காக 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த புத்தகத் திருவிழாவில் உலக அளவில் புகழ்பெற்ற புத்தகங்களும் இடம்பெற உள்ளன. குறிப்பாக இந்த புத்தக கண்காட்சியில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் பதிப்புகளும் இடம்பெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin opened 46th Chennai Bookfair


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->