சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு...! - திருப்பூரில் போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது...!
Minor girl harassement case young man arrested Tiruppur under POCSO Act
திருப்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு தொடர்ந்து உடல்நலக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அந்த சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பெற்றோர் நடத்திய விசாரணையில், திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியைச் சேர்ந்த பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணிபுரியும் அரசு (19) என்பவர், சிறுமியுடன் பழகி பாலியல் வன்கொடுமை செய்ததாலேயே கர்ப்பம் ஏற்பட்டது என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட அரசுவை கைது செய்தனர்.
English Summary
Minor girl harassement case young man arrested Tiruppur under POCSO Act