அண்ணாமலை சொல்வதெல்லாம் வெறும் கற்பனை தான் - அமைச்சர் பெரிய கருப்பன்.! - Seithipunal
Seithipunal


அண்ணாமலை சொல்வதெல்லாம் வெறும் கற்பனை தான் - அமைச்சர் பெரிய கருப்பன்.!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அடுத்த வைகை ஆற்றில் சுமார் 30.60 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டும் பணி தொடங்க இருந்தது. இந்தப் பணியினை கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் துவங்கி வைத்துள்ளார்.  

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "திமுகவினர் மீது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கும் சொத்து பட்டியல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பெரிய கருப்பன் பதில் அளித்ததாவது:-

 "அண்ணாமலை வெளியிட்டிருக்கும் ஊழல்  குற்றச்சாட்டு குறித்து, அவரிடம் ஆதாரம் இருந்தால் அது குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டியது தானே. அதை செய்யாமல் சினிமா ரிலீஸ் போல நாள் குறித்து சொல்ல வேண்டியது ஏன்?.

அண்ணாமலை குறித்து ஆருத்ராவில் தொடங்கி பல புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் சொல்லும் புகார்கள் எல்லாம் வெறும் கற்பனை தான் . அந்த கற்பனைக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister periya karuppan press meet in sivakangai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->