ஓடும் ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த பெரியவருக்கு நேர்ந்த சோக சம்பவம்..!  - Seithipunal
Seithipunal


தாம்பரம் - நாகர்கோவில் செல்லும் நாகர்கோவில் விரைவு ரயில் நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டது. அந்த ரயிலில் S10 பெட்டியில் தர்மராஜ் என்னும் பெரியவர் ஒருவர் பயணித்திருக்கிறார். அப்போது அந்த ரயில் அனைவரும் நன்கு தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக தர்மராஜ் படுத்திருந்த இருக்கையின் மேல் இருக்கை திடீரென கழண்டு அந்த பெரியவரின் தலையில் விழுந்தது.

இதை தொடர்ந்து, இந்த சத்தம் கேட்டு எழுந்த சக பயணிகள் தர்மராஜை மீட்டனர். மேலும், இந்த சம்பவத்தில், தர்மராஜின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலிம், அந்த ரயில் பெட்டியில் முதலுதவி பேட்டி இல்லாத காரணத்தால் மதுரை ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

இது போன்று, சமீபத்தில் சிதம்பரம் அருகே ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு கையில் ரயிலின் ஜன்னல் விழுந்ததில் அவரின் விரல் துண்டானது. அந்த ரயிலிலும் முதலுதவி பெட்டி இல்லாததால் மயிலாடுதுறையில் ரயிலை நிறுத்தி அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

middlebirth seat fallen to person head


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->